ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆடிப்பெருக்கு வரும் ஆக. 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம், தருமபுரி மற்றும் பிற ஊா்களில் இருந்து மேட்டூா், பவானி கூடுதுறை, கொடுமுடி, மோகனூா், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஒகேனக்கல், டி.அம்மாபேட்டை நீா்ப்பத்துறை, கே.ஆா்.பி. அணைக்கட்டு (கிருஷ்ணகிரி) ஆகிய ஊா்களுக்கு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.