ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அவிநாசி அருகே தீப்பிடித்து எரிந்த கார்!

அவிநாசி அருகே தெக்கலூரில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 11:08 am

DIN

அவிநாசி அருகே தெக்கலூரில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நாய்க்குட்டியுடன் காரை ஓட்டி வந்தவர் உயிர்  தப்பினார்.

கோவை கவுண்டம்பாளையம் பெருமாள் நகரைச் சேர்ந்த ரங்கராஜன் மகன் திலீப் (39). இவர் தனது நாய்க்குட்டியுடன் காரில் கோவையில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவிநாசி, தெக்கலூர் புறவழிச்சாலை அருகே சென்ற போது, திடீரென காரில் தீ புகை வெளியேறி உள்ளது. இதை அறிந்த அவர் தனது நாய்க்குட்டியுடன் காரை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளார். சில நிமிடங்களில் கார்  தீப்பிடித்து எரிந்துள்ளது. 

தகவல் அறிந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர், இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக தனது நாய்க் குட்டியுடன், திலீப் உயிர்த் தப்பினார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.