ஆக. 9 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி(புதன்கிழமை) ஆடி கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அந்தவகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 9 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...