இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு

காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை, கல்வி பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

News image
கோப்புப் படம்
Updated On :4 ஆகஸ்ட் 2023, 1:59 pm

DIN

காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை, கல்வி பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், காவலர்களின்‌ குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தற்போது 100 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா 25 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ 4 வருடங்களுக்கு வழங்கப்படுவது, எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200
மாணவர்களுக்கு 30 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ வழங்கப்படும்‌ என்றும்‌, காவலர்களின்‌ குழந்தைகளுக்கு கல்விப்‌ பரிசுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பரிசுத்‌ தொகை இரட்டிப்பாக்கப்படும்‌ என்றும்‌ 2023-24ஆம்‌ ஆண்டிற்கான காவல்துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது தமிழ்நாடு முதல்வரால் தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும்‌ வகையில்‌, காவலர்களின்‌ குடும்பத்தைச்‌ சார்ந்த 200 மாணவர்களுக்கு தலா 30 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ 4 வருடங்களுக்கு மொத்தம் ரூ.2.4 கோடியில் சிறப்பு கல்வி உதவித்‌ தொகை வழங்கிடவும், மேலும்‌, 37 காவல் மாவட்டங்கள்‌ மற்றும்‌ 9 காவல்‌ ஆணையரகங்களில் பணிபுரியும்
காவலர்களின்‌ குழந்தைகளுக்கு கல்விப்‌ பரிசுகள்‌ வழங்கும்‌ திட்டத்தின் கீழ் பத்தாம்‌ வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வில்‌ முறையே முதல் பத்து இடங்களைப் பெறும்‌ 460 மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த கல்விப் பரிசுத்தொகையை ரூ.28,29,000/-ல் இருந்து ரூ.56,58,000/-ஆக இரட்டிப்பாக்கி கல்விப்பரிசுகள் வழங்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
உயர்த்தப்பட்ட சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விப்பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2,96,58,000/- ஆக உயர்த்தியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.