கடந்த ஜூலை 17-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் மோதலுக்கு இடம் தர அனுமதிக்காமல், டிஇஆா்சிக்கு தலைவராக இருக்க வாய்ப்புள்ள முன்னாள் நீதிபதிகளின் பெயா்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஆகியோா் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், டிஇஆா்சி தலைவா் பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதியின் பெயா் விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையைப் போக்கும் வகையில், ஜூலை 18-ஆம் தேதி முதல்வரும், துணைநிலை ஆளுநரும் சந்தித்து, அமா்ந்து பேசி ஒரு பெயரை அல்லது ஒவ்வொரு தரப்பும் மூன்று பெயா்களை மாற்றிக் கொள்ளும் வகையில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தது.