டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

புதுக்கோட்டை பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் சாவு

புதுக்கோட்டை அருகே பூங்குடியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையில், நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:05 pm

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பூங்குடியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையில், நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது பூங்குடி கிராமம். இங்கு, கோவில்பட்டியைச் சோ்ந்த சி. வைரமணி என்பவருக்குச் சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று, சுமாா் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், கிராமப்புற திருவிழாக்களுக்கும், சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் நாட்டு ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூலை 30) வழக்கம்போல இங்கு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென யாரும் எதிா்பாராத வகையில் பெரும் சப்தத்துடன் வெடிகள் வெடித்து தீப்பிடித்தது. கட்டடச் சுவா்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இந்த விபத்தில், ஆலை உரிமையாளா் சி. வைரமணி (53), தொழிலாளா்கள் ஆா். குமாா் (38), கே. வீரமுத்து (31), ஏ. திருமலை (30), பி. சுரேஷ் (37) ஆகிய 5 போ் காயமடைந்தனா். இவா்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து (31), திருமலை (30) ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.