தொலைபேசி வாயிலாக அர்ச்சனை வசதி இல்லை: பழனி கோயில்

தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யும் வசதி எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக் கோயில்
பழனி மலைக் கோயில்
Published on
Updated on
1 min read


தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யும் வசதி எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி மலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஒரு கோடி பேருக்கு முன்பதிவு மூலம் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பொய்யான செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இணையதளம் வழியாக பகிரப்படும் தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  ஒரு கோடி பேருக்கு தொலைபேசி வாயிலாக அர்ச்சனை செய்யப்படும் என்று பரப்பப்படும் தகவல் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com