சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மயானத்தில் உடல்கள் பகுதியளவு மட்டுமே எரியூட்டப்படும் அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.
நெசப்பாக்கத்திற்குட்பட்ட மயானத்தில் பகுதியளவு எரிந்த உடலை வெளியே எடுத்துவிட்டு, அடுத்த உடலை உள்ளே வைத்து ஏரியூட்டுவது அம்பலமானதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னையில் உயிரிழந்த 68வயது முதியவரின் உடலை அந்த மயானத்திற்கு கொண்டுசென்று இறுதிச்சடங்கு முடிந்து எரியூட்டப்பட்ட 40 நிமிடங்களில், அவரின் உறவினர்களிடம் சாம்பல் வழங்கப்பட்டதால் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
ஒரு உடலை முழுவதும் எரியூட்டுவதற்கு 2 மணிநேரம் தேவைப்படும். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மயனாத்திற்கு சென்று சோதனை செய்தபோது, அவர்கள் கொடுத்த உடல் பாதியளவு எரியூட்டப்பட்டு வெளியில் கிடத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான விடியோவையும் பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மயானத்தின் ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய சுகாதார ஆய்வாளர், ஒரு உடலை முழுவதும் எரியூட்டுவதற்கு 2 மணிநேரம் ஆகும். இங்கு ஒரு நாளுக்கு 4 உடல்களை மட்டுமே எரிக்க முடியும். மாலை 4 மணியளவில் மேலும் 2 உடல்கள் எரியூட்ட இருந்ததால், அவசரமாக முடிப்பதற்காக பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை எடுத்து புதிய உடலை உள்ளே அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர், கவுன்சிலரின் அறிவுறுத்தலின்பேரில் இரவு 11 மணிக்கு அந்த உடல் முழுவதும் எரியூட்டப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக ஆதாரத்துடன் உண்மை தெரியவந்துள்ளது. குடும்பத்தாரிடம் சாம்பல் வழங்கப்பட்ட பிறகு எல்லா உடல்களையும் ஒன்றாக வைத்தே எரிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



