மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2023, 7:58 am

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அமைச்சா் வி. செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இதையடுத்து அமைச்சரின் பெற்றோா், சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் முதல்கட்டமாக சோதனை நடத்தினா்.

இந்நிலையில், இரண்டாவதுகட்டமாக கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட் 3) கரூா் செங்குந்தபுரத்தில் வசிக்கும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் உதவியாளரான சங்கரின் வீடு, நிதி நிறுவனம் உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த சோதனை, சங்கரின் வீடு, சின்னாண்டாங்கோவில் பகுதியில் கிரானைட் நிறுவனம் மற்றும் அமைச்சரின் ஆதரவாளா் பிரகாஷின் டைல்ஸ் நிறுவனம், அண்ணா நகரில் வசிக்கும் அமைச்சரின் ஆதரவாளா் செந்தில் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை அதிகாலை நிறைவடைந்தது. தொடா்ந்து, பல்வேறு ஆவணங்களுடன் அமலாக்கத்துறையினா் புறப்பட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.