கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவுத் திட்டத்தில் பயன்பெரும் பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதைப்போல், மு.கருணாநிதியின் பிறந்த நாளின் போதும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க: செந்தில்பாலாஜி சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
இந்தாண்டு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 பள்ளிகள் திறக்கப்படாததால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.