47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கு: எஸ்.ஜி.சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்

ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவரும் புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2023, 6:02 am

DIN

சிதம்பரம்: ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவரும் புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாா் தீட்சிதர்களை தாக்கி பூணுலை அறுத்ததாக போலி செய்தியை சமூக ஊடகங்களில் தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மற்றும் கௌசிக் சுப்ரமணியம் ஆகியோர் பதிவிட்டு அவதூறு பரப்பியதாக பொதுமக்கள் பேசிக் கொண்டதாக, சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜிதின் (38) சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவர் மீது சிதம்பரம் நகர போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  

இந்த நிலையில் இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்ற இருவரும், சிதம்பரம் நம்பர் - 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை நீதிபதி முன்பு ஆஜராகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.