

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் புதன்கிழமை(ஆக.11-16) வரை 6 நாள்கள் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.
வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 150 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் திடீா் மழை: சென்னையில் வியாழக்கிழமை மாலை குரோம் பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா், குன்றத்தூா், அம்பத்தூா் பகுதிகளில் திடீரென மழை பெய்தது . இந்த மழையினால் வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.