காஞ்சிபுரம் பண்ணையில் தீ: 3,000 கோழிக்குஞ்சுகள் பலி

காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பண்ணையில் தீ: 3,000 கோழிக்குஞ்சுகள் பலி
காஞ்சிபுரம் பண்ணையில் தீ: 3,000 கோழிக்குஞ்சுகள் பலி
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் முசரவாக்கம் - முத்துவேடு சாலை கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கோழி பண்ணையில் 3,000 பிராய்லர் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் திடீரென கோழிப்பண்ணையின் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோழிப்பண்ணையில் எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

இருப்பினும் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ முழுவதும் பரவி கோழிப்பண்ணையிலிருந்த 3,000 கோழிக்குஞ்சுகளும் தீயில் எரிந்து உயிரிழந்தது.

இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு தயாராகி வந்த கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com