தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு கேட்டு தலைமை அஞ்சலகம் முற்றுகை!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

News image

கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கக் கோரி அஞ்சலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டம்.

Updated On :12 ஆகஸ்ட் 2023, 1:18 pm IST

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

கூத்தாநல்லூர் நகர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், லெட்சுமாங்குடி பாலத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

போராட்டத்திற்கு, மாவட்டப் பொருளாளர் கே. தவபாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பெ.முருகேசு, நகர் மன்ற துணைத் தலைவர் எம். சுதர்ஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடமையாக திறந்து விட வேண்டும். தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி கருகி இழப்பை அடைந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், நகர் மன்ற உறுப்பினர் தனலெட்சுமி, விவசாய தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எம். சிவதாஸ், அ.பன்னீர்செல்வம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.