மணப்பாறை: மணப்பாறையில் 96 வயதான சுதந்திர போராட்ட தியாகி, குடியிருக்க வீடு கட்டித் தர கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 96). சுதந்திரப் போராட்ட தியாகியான இவரின் மகனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், தனது வீடு சேதமடைந்து இடிந்துவிட்டதால் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்று சில ஆண்டுகளாக அதிகாரிகள், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்துள்ளார்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் காமராஜர் சிலை முன்பு கோரிக்கை அடங்கிய பதாகையுடன், உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் காமராஜர் சிலைக்கு சென்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுதந்திர போராட்ட தியாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள், ஆட்டோவில் சுந்தரத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர நாளன்று சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பட்டுக்கோட்டை அருகே தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தோ்வை எழுதிய மகன்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை
குஜராத் ஏா் இந்தியா விமான விபத்து! விசாரணை அறிக்கை விரைவில் வெளியீடு: மத்திய அரசு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

