வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
Updated on
1 min read

வங்கக் கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com