பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி வெடித்து சிதறியது: ஓட்டுநர் உள்பட 6 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியது. இதில் டிரைவர் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:21 am IST

காஞ்சிபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியது. இதில் டிரைவர் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். 

காஞ்சிபுரம் அருகே பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கிருஷ்ணகிரியில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மற்றும் நோயாளி உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலை ஓரமாக காவல்துறையினர் நிறுத்திய அரை மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தீப்பிடித்து ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறியது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறியதில் வாகனத்தின் பாகங்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.