ஓணம்: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!

திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. 

இந்த ஆண்டு திருவோண பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகளுக்காகவும் இன்று கோயில் நடைதிறக்கப்படுகிறது. இன்று முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படவுள்ளன.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழிபேசும் மக்களின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் முன்பதிவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com