மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சந்திரயான்-3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் நேரில் வாழ்த்து

சந்திரயான்- 3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

News image

சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேலுவின் தந்தை பி.பழனிவேல்-தாய் ரமணி ஆகியோரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன்.

Updated On :30 ஆகஸ்ட் 2023, 7:27 am


விழுப்புரம்: சந்திரயான்- 3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

உலக நாடுகளே இந்தியாவை வியந்து பாா்க்கும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்- 3 திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளனா். சந்திரயான்- 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருபவா் விழுப்புரத்தைச் சோ்ந்த பி.வீரமுத்துவேல்.

இந்த நிலையில் சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலிடம் தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், உலகளவில் இந்தியாவுக்கு பெருமை கிட்டியுள்ளது. அதில், தங்கள் மகனின் பங்கு அளப்பரியது என்று அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தி வருகின்றனர்.

வீரமுத்துவேலிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியபோதுகூட, தமிழகத்துக்கு வரும்போது நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்துள்ளாா். 

இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேலுவின் தந்தை பி.பழனிவேல்-தாய் ரமணி ஆகியோரை  நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் புதன்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

அப்போது, நாட்டிற்கு பெருமைத் தேடி தந்த மகனை பெற்ற நீங்கள் நீண்ட ஆயுளோடு அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாக சத்தியநாராயணன் தெரிவித்தார். அப்போது, ரஜினி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.