விழுப்புரம்: மூன்று சட்டங்களின்பெயர்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதாக்களைத் தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியத் தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய சட்டங்களை ஹிந்தி - சமஸ்கிருத பெயர் மாற்றும் வகையில் மத்திய அரசு 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தது. இதை கண்டித்து விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் வழக்குரைஞர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.காளிதாஸ் தலைமை வகித்தார். பல்வேறு வழக்குரைஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.