மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: ’விவரிக்க வார்த்தைகள் இல்லை..’: தமிழ்நாடு வெதர்மேன்!
இதனால், சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரி மற்றும் கடலோரப் பகுதிகளில் மழையளவு அதிகமாக காணப்படுகிறது.
பல பகுதிகளில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பெரம்பூரில் காருக்குள் மழைநீர் புகுந்ததால் சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர் எக்ஸ் தளத்தில் உதவி கேட்டு பதிவிட்டார்.
உடனடியாக, அதற்கு காவல்துறையினர் பதிலளித்ததுடன் தான் வேகமாக மீட்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.