புதுக்கோட்டை நகருக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வெடி தயாரிப்புக் கூடம் முழுமையாக வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக தயாரிப்புக் கூடத்தில் அப்போது யாரும் இல்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.