வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜேசிபி வாகனத்தில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர்!

சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

News image
சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு.
Updated On :7 டிசம்பர் 2023, 10:57 am

DIN

சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தமிழக அரசும் பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. 

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜேசிபி வாகனத்தில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கினார். அங்கு வீடு, வீடாகச் சென்று அவர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.