கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜேசிபி வாகனத்தில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர்!

சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

News image

சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு.

Updated On :7 டிசம்பர் 2023, 10:57 am

சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தமிழக அரசும் பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. 

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜேசிபி வாகனத்தில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கினார். அங்கு வீடு, வீடாகச் சென்று அவர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.