சென்னை வேளச்சேரி பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னை புயல் பாதிப்பு: ஹெலிகாப்டரில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு!
சென்னையில் வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தமிழக அரசும் பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜேசிபி வாகனத்தில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கினார். அங்கு வீடு, வீடாகச் சென்று அவர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!