காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சில தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சென்னையில் நாளையும்(டிச. 8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அந்தவகையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.8 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை(டிச.8 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.