பூந்தமல்லியில் உள்ள 3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மகளிர் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன போரூரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பள்ளிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் இன்று(டிச. 12) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதையும் படிக்க: தண்டவாளத்தில் விரிசல்: மின்சார ரயில்கள் தாமதம்
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 4.12.2023 முதல் 9.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.