மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் டி ஆர் பி ராஜா

மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் டி ஆர் பி ராஜா
Published on
Updated on
1 min read

சென்னை : மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.

மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்டஹ் வகையில், தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 4.78 பில்லியன்(478 கோடி) டாலர்களாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.

இதன்முலம், இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்கு 30.86 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி, கடந்த ஆண்டு 5.37 பில்லியன்(537 கோடி) டாலர்களாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 8 பில்லியன்(800 கோடி) டாலர்களாக அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com