கனமழை: வந்தே பாரத் உள்பட 6 ரயில் சேவைகள் ரத்து!

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதேபோன்று திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் இடையிலான ரயில்களும் ரத்து செய்யபட்டுள்ளன. நிஜாமுதீன் ரயிலும் கனமழையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை - நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com