தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதேபோன்று திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் இடையிலான ரயில்களும் ரத்து செய்யபட்டுள்ளன. நிஜாமுதீன் ரயிலும் கனமழையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை - நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.