ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கனமழை: வந்தே பாரத் உள்பட 6 ரயில் சேவைகள் ரத்து!

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :18 டிசம்பர் 2023, 3:56 am

DIN

தொடர் கனமழை காரணமாக நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதேபோன்று திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் இடையிலான ரயில்களும் ரத்து செய்யபட்டுள்ளன. நிஜாமுதீன் ரயிலும் கனமழையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை - நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.