தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச. 18) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், அத்தியாவசியத் துறைகள் மட்டுமே செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.