விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நேற்று(திங்கள்) மட்டும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு பெய்த கனமழையால் வத்திராயிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மகாராஜபுரம் அரசுப் பள்ளி, கூமாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் வளாகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அந்த இரு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!