மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்: எடப்பாடி பழனிசாமி 

இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 டிசம்பர் 2023, 4:49 am

DIN

இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ-வின் தந்தை அண்மையில் காலமானார்.  இதனையடுத்து,  துக்கம் விசாரிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள கேபி முனுசாமியின் இல்லத்திற்கு இன்று வருகை புரிந்தார்.  

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பருவ மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக அரசுக்கு பலத்த மழை குறித்து தகவல் தெரிவித்தது.  தமிழக அரசு,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டது. பருவ மழை குறித்து,  தமிழக அரசு மக்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கவில்லை.  இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட வடிகால் பணிகளை,  தற்போதைய அரசு நிறைவேற்ற வில்லை. மழை வெள்ளம் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசு,  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மீது பழி சுமர்த்தி,  தங்களது பணியை தட்டிக் கழிக்கிறார்கள்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, முக்கிய அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம்.

சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.  தமிழக முதல்வருக்கு நிர்வாகம் எவ்வாறு செய்வது என தெரிகிறதா என தெரியவில்லை.  அவ்வாறு தெரிந்திருந்தால் அவர் செயல்பட்டிருப்பார்.

தமிழகத்தில் ஊழல் செய்வதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது.  தமிழக அமைச்சர்கள் பலர்,  நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி,  வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், பாலகிருஷ்ணா ரெட்டி, வளர்மதி, கிருஷ்ணகிரி  அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே. அசோக்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.