கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் நாளை வரை ரத்து!

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை  இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்வதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை  இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்வதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக கடந்த 8 ஆம் தேதி முதல் 13 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மலை ரயில் இயங்கியது

இந்த நிலையில், கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது.  சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் உதகை  இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com