மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்வதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக கடந்த 8 ஆம் தேதி முதல் 13 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மலை ரயில் இயங்கியது
இந்த நிலையில், கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: தூத்துக்குடி-திருச்செந்தூர் பேருந்துகள் இன்றும் இயங்கவில்லை!
இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.