ராமேசுவரம்: பாம்பன் துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு ஒன்று ஞாயிற்றுக்கிழமை மா்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து தீ விபத்து குறித்து போலீசாா் வழக்குப் பதிந்து விசரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பிரான்சிஸ் நகரை சோ்ந்த காலீன்ஸ் என்பவரக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச.24) அதிகாலை 5 மணிக்கு திடீரென படகு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இன்த தீ விபத்தில் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.