திருநெல்வேலி: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவுக் காரணமாக பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இருமல்,காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | மறைந்த விஜயகாந்த்: தேமுதிக தலைமை அலுவலகத்தில் மக்கள் அஞ்சலி!
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வந்த நிலையில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.