ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வெள்ளக்கோவில் அருகே பேருந்து - வேன் மோதி விபத்து: 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து - ஆம்னி வேன் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 8:22 am

DIN

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து - ஆம்னி வேன் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Story image

கோயம்புத்தூரில் இருந்து கும்பகோணத்துக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வெள்ளக்கோவில் அருகிலுள்ள வெள்ளமடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரில் வெள்ளக்கோவிலில் இருந்து திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் (மாருதி ஆம்னி) நேருக்கு நேர் மோதியது. 

Story image

இதில் இருந்த 6 பேர் வெள்ளக்கோவிலுக்கு  பெண் பார்க்க மாப்பிள்ளையுடன் வந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. வெள்ளக்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.