டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை!

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2023, 4:50 am

DIN

வன்கொடுமை சட்டத்தில் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் இரும்பாலை அருகேயுள்ள திருமலைகிரியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிரவீன்குமார் என்ற இளைஞர் கோயிலில் சாமி தரிசனம் சென்றபோது மற்றொரு தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தி திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், பிரவீன் குமாரை அவதூறாக பேசி, சாதி பெயரை சொல்லி திட்டியதாக கொடுக்கப் பட்ட புகாரின் பேரில் இரும்பாலை காவல் துறையினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மாணிக்கம் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திற்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.  ஒரு மாதம் திருமலைகிரி பஞ்சாயத்து பகுதிக்குள் நுழையக் கூடாது. 

தினமும் காலையும் மாலையும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.