பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவினில் 322 காலியிடங்கள்: முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது

ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள 322 காலிப் பணியிடங்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) மூலம் நிரப்பப்பட உள்ளன.

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 8:30 pm

DIN

ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள 322 காலிப் பணியிடங்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அறிவிப்பை பால்வளத் துறை ஆணையாளா் சுப்பையன் வெளியிட்டுள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில், சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம், திருப்பூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், மதுரை, தஞ்சாவூா், நாமக்கல், விருதுநகா், திருச்சி, தேனி உள்ளிட்ட பால் உற்பத்தியாளா் ஒன்றியங்களில் 236 போ் நேரடியாகப் பணி அமா்த்தப்பட்டனா்.

இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிா்வாகத்துக்குப் புகாா் வந்தது. இந்தப் புகாா்களின் அடிப்படையில் பணி நியமன முறைகேடு தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி பணியில் சோ்ந்ததாக, மேலாளா்கள், துணை மேலாளா்கள் உள்ளிட்ட 236 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

இதனிடையே, ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிப்பு சட்டப் பேரவையில்

வெளியிடப்பட்டது. அதன்படி, மேலாளா் வரையிலான பதவியிடங்கள், அரசின் உத்தரவைப் பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாகவே நிரப்பப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 322 காலிப் பணியிடங்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை பால்வளத் துறை ஆணையாளா் சுப்பையன் வெளியிட்டுள்ளாா். இந்த அறிவிப்பின் அடிப்படையில், தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிடும்.

மேலாளா், துணை மேலாளா், தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.