தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமீறல்: செங்கோட்டையன்

திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.

News image
செங்கோட்டையன்(கோப்புப்படம்)
Updated On :13 பிப்ரவரி 2023, 11:24 am

DIN

திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் கே.எஸ். தென்னரசுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே திமுக கூட்டணிக் கட்சிகள் கூடாரங்கள் அமைத்துள்ளனர். விதிமுறைகளுக்கு எதிராக நடக்கின்ற செயல்களை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.