வேலூரில் தனியார் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை!

குடியாத்தம் பகுதியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

குடியாத்தம் பகுதியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தனியார் குழுமத்துக்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வேலூர் ஓல்ட் பைபாஸ் சாலையில் உள்ள அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் தில்லியை சேர்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட குழுவினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி எய்ப்பு செய்ததாக புகாரின்பேரில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் தனியார் குழுமத்தில் உள்ள ரியல் எஸ்டேட் குறித்த ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் இதர தொழில்கள் குறித்த ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com