தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 12:09 pm

DIN

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூரில் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற 3 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர். 

Story image

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து 4 பேரையும் தீவிரமாகத் தேடிய நிலையில் 4 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி புதுப்பட்டி அரசு நடுநிலை பள்ளி மாணவிகள்.

விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி புதுப்பட்டி அரசு நடுநிலை பள்ளி மாணவிகள்.

இவர்கள் நால்வரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Story image

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.