கோப்புப் படம்
கோப்புப் படம்

மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தமிழக அரசு பரிசீலனை

விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 
Published on

விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பி. செந்தில்குமார், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதன்படி, விதிகளுக்கு புறம்பாக மாவட்ட எல்லைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

தமிழக எல்லையோர மாவட்டங்களில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com