தொலைதூரப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவு வழங்கக்கூடாது என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணித்திற்கு இடையே உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்துவது வழக்கம். அங்கு பயணிகளுக்கு பொதுவான இடத்திலும், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறையிலும் உணவுகள் வழங்கப்படும்.
இந்நிலையில், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என்று உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கும் உணவு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்க்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கப்பட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


