ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

குடிசையில்லா நகரத்தை உருவாக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

குடிசையில்லா நகரங்களை உருவாக்க வேண்டும் என்றும், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கொள்கைகளை வகுத்து வருவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
மு.க. ஸ்டாலின்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:32 am

DIN

குடிசையில்லா நகரங்களை உருவாக்க வேண்டும் என்றும், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் கொள்கைகளை வகுத்து வருவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால், முயற்சியையும் பெரிதாக எடுத்து வருகிறோம். 

ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து வெளியிட்டுள்ளோம்.

குடிசையில்லா நகரத்தை உருவாக்கும் முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. குடிசையில்லா நகரங்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வருவாய் குறைவாக உள்ள மக்களுக்கு வீட்டு வசதி கழகத்தின் சார்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

1991ஆம் ஆண்டு 1.90 கோடியாக இருந்த நகர மக்கள் தொகை 2011ல் 3.41 கோடியாக அதிகரித்தது. 2031ஆம் ஆண்டு 5.31 கோடியாக உயரும். 

2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.