கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதிய நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 8:25 pm

திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 
காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். 
மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் மாவட்ட திமுக சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மையப்பன் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மாணவ, மாணவிகளிடம் காரிலிருந்தபடியே நலம் விசாரித்தார். 
சேமிப்புக் கிடங்கில் ஆய்வு... தஞ்சை சாலையில் கட்டப்பட்டுவரும் சேமிப்புக் கிடங்கு பணிகளையும் பார்வையிட்ட முதல்வர், திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று 
திரும்பினார். 
சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மக்களவை திமுக உறுப்பினர் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அருங்காட்சியகத்தில் ஆய்வு... மாலையில், காட்டூருக்குச் சென்ற முதல்வர் அங்கு, கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 
பின்னர், அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மீண்டும் திருவாரூருக்குத் திரும்பினார்.
முன்னதாக, பிற்பகல் 3 மணியளவில் சந்நிதி தெருவுக்கு வந்த முதல்வர், அங்கு காத்திருந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, அங்குள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.
முதல்வர் வருகையையொட்டி, மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் க. கார்த்திகேயன் தலைமையில், தஞ்சை சரக துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.