எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகையைத் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
மேலும் விசைப்படகையும் மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.