முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில், ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.
மேலும், தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.