FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திமுகவினர் யாரைக் கண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது: அனிதா ராதாகிருஷ்ணன்

நெல்லை பாளையங்கோட்டையில் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பற்றி...

News image

அனிதா ராதாகிருஷ்ணன்

Updated On :11 ஜூலை 2026, 6:09 pm IST

திமுகவினர் யாரைக் கண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை பாளையங்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில், அப்போது பேசிய அவர் எழுதிக் கொடுத்து மேடைக்கு மேடை பேசும் தேவை எங்களுக்கு கிடையாது. முதல்வர் எழுதி கொடுத்ததை பார்த்து மேடையில் பேசி வருகிறார்.

பேசுவது மறந்தவுடன் அருகில் உள்ள பேப்பரை எடுத்து பார்த்து படிக்கிறார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களின் செயலையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவு விரைவில் வரும்.

திமுகவைச் சார்ந்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டு ஓடி ஒளிபவர்கள் கிடையாது. கரூர் சம்பவத்தில் 42 பேர் இறந்த நிலையில் திருச்சியில் இருந்து முதல்வர் ஓடியதை அனைவரும் பார்த்தார்கள். அப்படி ஓடுபவர்கள் திமுகவினராக இருக்க மாட்டார்கள்.

திமுகவினர் யாரைக் கண்டும் ஓடுபவர்கள் கிடையாது. சம்பவ இடத்தில் நின்று பணியாற்றும் தலைவர்களாக தான் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

Summary

DMK cadre will never run away and hide from anyone, says Former Minister Anitha Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.