ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Published On :7 பிப்ரவரி 2024, 12:07 pm IST

அவிநாசி: திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீர்க்கும் புனிதத் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி தேர்த்திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, விநாயகர் பிரார்த்தனை, மிருத்யங்க யாகம், அங்குரார்ப்பணம், ரிஷப யாகம் ஆகியவை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை, திருமுருகநாதர், பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டு, கொடித்துணியில், அதிகாரநந்தி, சூரியன், சந்திரன், அஸ்திர தேவர் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவித்து, திருக்கொடிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

Story image

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருக்கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, திருக்கொடியேற்றப்பட்டது. மேலும் மார்ச் - 4 ம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.  மார்ச் - 5 திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. மார்ச் 6-ம் அதிகாலை மக நட்சத்திரத்தில், யாகவேள்வியுடன் சுவாமிக்கு, அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகள் நடைபெற்று, விநாயகர், திருமுருகநாதசுவாமி,  வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  

அன்று மாலை 3 மணிக்கு திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும், மார்ச் - 7ம் மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மார்ச் 8-ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக்காட்சிகளும், தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Story image

மார்ச் - 9ம் தேதி இரவு 7 மணிக்கு, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும், மார்ச் 10 -ம் தேதி பிரம்ம தாண்டவ தரிசனக் காட்சியும், மார்ச்.27ம் தேதி மஞ்சள் நீர் திருவிழாவும் நடைபெற்று, இரவு மயில்வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவையொட்டி, திருக்கோவில் வளாகத்தில் கலையரங்கத்தில், தினமும் இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.விழா ஏற்பாடுகளை, திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தக்கார் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.