இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் எனவும், அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009- ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வேறு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு, இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு எள்ளளவும் செவிசாய்க்கவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நேரடியாக தலையிட்டு ஆசிரியா் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


