தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இடைநிலை ஆசிரியா்களுக்கு சம ஊதியம்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் எனவும், அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலிய

News image
Updated On :1 ஜனவரி 2023, 9:34 pm

DIN

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் எனவும், அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009- ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வேறு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு, இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு எள்ளளவும் செவிசாய்க்கவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நேரடியாக தலையிட்டு ஆசிரியா் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.