கூத்தாநல்லூர்: மேலப்பள்ளிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலப்பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மேலப்பள்ளிவாசல் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறார் செயலாளர் முஹம்மது ஷஹாபுதின்.
மேலப்பள்ளிவாசல் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறார் செயலாளர் முஹம்மது ஷஹாபுதின்.
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலப்பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கூத்தாநல்லூர் மேலப்பள்ளி நிர்வாக சங்கத்தின் 96 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நிர்வாக சங்கத்தின் தலைவர் டி.ஏ.பாருக் அலி தலைமை வகித்தார். 

மேலப்பள்ளி இமாம் எஸ்.அப்துல் ரஹீம் கிராஃஅத் ஓதினார்கள். கூட்டத்தில், 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் ஒப்புதல் பெறப்பட்ட்து.

இதைத்தொடர்ந்து, 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் டி.ஏ.பாருக் அலி, உதவி தலைவர் கே.ஆர்.ஏ.நூருல் அமீன், செயலாளர் கே.ஜெ.முஹம்மது ஷஹாபுதீன், உதவிச் செயலாளர் ஏ.ஏ.அப்துல் ஸலாம், முத்தவல்லி ஏ.ஏ. பாரக் அலி, உதவி முத்தவல்லி ஏ.எம்.அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிககளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

தொடர்ந்து, 31 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுக் குழுவில், மேலப்பள்ளி வாசல் நிர்வாக சங்கச் செயலாளராக செயல்பட்ட, எல்.எம்.முஹம்மது அஷ்ரப்க்கு, சால்வை அணிவித்து, கெளரவிக்கப்பட்டார்.

இக்கூட்டத்தில், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com